திங்கள், 20 டிசம்பர், 2010

கனவுகள்


கனவுகள்



கனவுகளில் மீளாத கவிதைகளோடு
என் அன்பிற்கினிய புத்தகமே

பறவையின் சிறகுகளில் பனி படரும்
பொழுதுகளில் மெல்லிய விரல்களுக்குள்
சிறைப்பட்டிருந்தாய் நீ

நானோ நனவுகளின்
கொடுஞ் சிறையில் மிதிப்பட்டிருந்தேன்

எப்போதோ எழுதப்பட்டதாக
உனக்கும் எனக்குமான உறவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக